கடவுள் கூறியதாக ஆறு வயது சிறுவனை நரபலி கொடுத்த இளைஞர்கள்

இந்தியாவின் டெல்லியில் கடவுள் கூறியதாக இளைஞர்கள் இருவர் ஆறு வயது சிறுவனை பலிகொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் லோதி காலனி பகுதியில் ஆறு வயது சிறுவன் பிணமாக கிடந்துள்ளான். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். குறித்த சிறுவன் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்ததால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் … Continue reading கடவுள் கூறியதாக ஆறு வயது சிறுவனை நரபலி கொடுத்த இளைஞர்கள்